Friday 11 December 2009

கிடைப்பான இன்னொரு பாரதி

பாரதியின் பிறந்தநாள் அன்று மகாகவியின் மீது உள்ள பற்றின் காரணமாய் கிறுக்கியது...
 

முன்டாசை தலையில் கட்டி,
மீசையை முறுக்கி விட்டால்,
காட்சிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
கவிபாட கிடைப்பான இன்னொரு பாரதி??

வசனங்கள் எழுதித்தந்து,
குரலிலே ஆண்மை சேர்த்தால் ,
செவிக்கு கிடைத்திடுவான் ஒரு பாரதி!!
வார்த்தைகளால் வெடிகள் வீசி,
கவிதைக்கு கந்தகம் பூசி,
நெஞ்சுக்குள் நெருப்பு ஏற்றிட
கிடைப்பான இன்னொரு பாரதி??

Tuesday 17 November 2009

நான் - 7

என்னை புதைக்க
குழி தோண்டுபவர்களுக்கு
எப்படி சொல்வது
நான் விதை என்று ???

Monday 12 October 2009

தீபாவளி - DEEP ஆனா வலி

ஆசையாய் உறவினர் அனைவரும்
அவரவர் துணிகளை
ஆராய்ச்சி செய்தவண்ணம்
பண்டிகையை கொண்டாட...
அதற்கு காரணமானவன்
மட்டும் ஓரமாய் சிந்தனையோடு அமர்ந்திருந்தான்....
அவனுக்கு மட்டும் தீபாவளி - DEEPஆனா - வலியாய் தெரிந்தது ...

Tuesday 6 October 2009

நான் - 6

என்னை எரிக்க தீக்குச்சி
கொண்டு வந்தவர்களுக்கு
எப்படி புரியவைப்பது
நான் நெருப்பு என்று ???

Tuesday 15 September 2009

கவிஞன்

வார்த்தைகளால் வலியினை
வாசிக்கத்தெரிந்த  வித்தகன் !!!

Thursday 3 September 2009

ஆசிரியர் தினம்

 ஆசிரியர் தினம் கொண்டாட
அனைவரிடமும் ஐந்து ருபாய் வசுல்செய்த
ஆசிரியர் தான்மட்டும் கொண்டாடினர்
தனியாய் - டாஸ்மாக்கில்.

Friday 21 August 2009

ஐயகோ... பாரதி இதுவா நீ கண்ட கனவு???

'பள்ளி தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்றான்
பாரதி... 'மெய்யாக்குகிறோம் மகாகவி பாரதியின்
கனவை' என அனைத்து கல்வி
நிறுவனங்களும் உண்டியல் குலுக்குவதையும்,
நிதிவசூலிப்பதையும்  ஆரம்பித்துவிட்டன...