என்னை பற்றி சொல்லும் அளவுக்கு இன்னும் நான் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வாழ்கையின் உயரத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சாதாரண இளைஞன். கண்களில் கனவுகளை சுமந்துகொண்டு தூக்கத்தை தொலைத்துவிட்டு, சில கொள்கைகளுக்காக மட்டுமே வாழும் ஒரு சாதாரண மனிதன். தூய தமிழில் சொல்லவேண்டுமானால் "பிழைக்க தெரியாதவன்".
என்றாவது ஒருநாள் இந்த தேசத்தை மாற்ற வாய்ப்பு கிடைக்கும் என காத்துஇருப்பவர்களுள் ஒருவன் !!! காசுக்கு கல்வியை விற்கும் மற்றும் வாங்கும் கயவர்களுக்கு இடையில் மாட்டிகொண்டு, மீள வழிதேடி தவிக்கும் ஒரு படித்த பாமரன் !!! பொரியல் செய்ய கூட தெரியாத பொறியாளர்களை உருவாக்கும் இந்த புண்ணிய பூமி பெற்றெடுத்த சில உண்மையான பொறியாளர்களில் ஒருவன் !!!
2 comments:
நல்லாயிருக்குங்க ..,
மிக்க நன்றி சூர்யா கண்ணன்.
Post a Comment